யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றிய வந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!
இன்று அதிகாலை 01:45 மணியளவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார்த ஊர்தி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றிய சிறியரக பட்டா வாகனம் பின்புறமாக மோதியதில் பட்டாவில் பயணித்த இருவர் (சாரதி, உதவியாளர்) படுகாயமடைந்தநர் படுகாயமடைந்தவர்கள் நோயாளர்காவுவண்டியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் உதவியாளர் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ள நிலையில் சாரதிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed